மத்திய கிழக்கு மோதலால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்துக!

0
6

ஈரான்-இஸ்ரேல் மோதலானது கடுமையான மனிதாபிமானப் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இந்த மோதலானது இந்த இரு நாடுகளினது மக்களை மட்டுமல்லாது, இந்நாட்டிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்று தொழிலாளர்களாக பணிபுரியும் சுமார் 20,000 பேரையும் பாதித்துள்ளது. இவ்வாறு அங்கிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே, இதற்கான முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அவர்களின் உயிர், நலன்புரி மற்றும் பாதுகாப்பு என்பவற்றிற்காக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் நமது நாட்டிற்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்றைய (19) பாராளுமன்ற சபை அமர்வின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், வெளிநாட்டு பணியாளர்களால் நமது நாடு 6.57 பில்லியன் டொலர்களை ஈட்டியது. 80% தொழிலாளர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ளனர். அந்நிய செலவாணி அனுப்புவது 10% குறைந்தால், டொலர் மில்லியன் 660 குறையும். மோதல் பரவினால், தொழில் இழப்பு ஏற்படும். இதனால் எமது நாட்டிற்கு கடும் பிரச்சினை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

🟩 எரிபொருள் விலைகள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

மேலும், மசகு எண்ணெய் விலைகள் 7% அதிகரித்துள்ளன. ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 75 டொலரை நெருங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த 10 வீத டொலர் அதிகரிப்பால் எண்ணெய் விலையில் 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நாம் மேலதிகமாக செலவிட வேண்டி வரும். வருடம் தோறும் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறோம். இது மொத்த இறக்குமதியில் 25% ஆகும். எரிபொருள் விலை உயர்வு காரணமாக நமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை முழுமையாக ஆராய்ந்து, பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நமது நாட்டின் தேயிலை ஏற்றுமதி குறித்தும் நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

இலங்கை தேயிலை ஏற்றுமதியில் ஈரான் 7 ஆவது பெரிய நாடாக காணப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில், இலங்கை 10.4 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் 40% ஆனவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மோதல் நிலைமை மேலும் மோசமடைந்தால், தேயிலை ஏற்றுமதிக்கு கடுமையான பொருளாதார ரீதியான பாதகம் ஏற்படும். செங்கடல் மற்றும் சுயஸ் கால்வாய் போன்ற கடல்சார் போக்குவரத்து மார்க்கங்கள் மூடப்பட்டால், நமது நாட்டின் கடல்சார் போக்குவரத்துத் துறையின் செலவும் அதிகரிக்கும். இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 சுற்றுலாத் துறையின் மீது ஏற்படும் தாக்கம் தொடர்பில் மதிப்பீடொன்றை நடத்துங்கள்.

20,000 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வருகை தந்திருந்தாலும், அது தற்போது குறைந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்து வருவது என்பன எமது சுற்றுலாத் துறையையும் பாதிக்கிறது.
இது அந்நிய நேரடி முதலீட்டிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகரித்த இறக்குமதிகள் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பும் குறைய வாய்ப்புள்ளது. பணவீக்கம் அதிகரித்து, நுகர்வோர் விலைச் சுட்டென் அதிகரிக்கக்கூடும். இது நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தும். இதனால் நாட்டில் வறுமை அதிகரிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தொழில்வாய்ப்பு குறையும்.

தொழில் இழப்பு சமூகப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் போன்ற சூழ்நிலைகளால் மிகப்பெரிய சமூக தாக்கமும் ஏற்படும். எனவே, எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விநியோகஸ்தர்களை பல்வகைப்படுத்த வேண்டிய அவசியமும் நமக்கு காணப்படுகின்றன. இந்த மோதலில் மனிதாபிமானம் தொலைந்து போன இந்த சூழ்நிலையில், ஒரு நாடு என்ற வகையில், இந்த நிலைமையைத் தணிக்க முடிந்தவரை தலையிட்டு, இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 நாம் மனிதாபிமானத்திற்காக நாம் முன்நிற்க வேண்டும்.

காஸா பகுதியில் நடைபெறும் மனிதாபிமானக் கொலைகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் அரச பயங்கரவாதம் மூலம் மனித உயிர்கள் அழிக்கப்படுவதன் தொடர்ச்சியாக இந்த நிலைமையை விவரிக்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை சுமந்து வரும் மனிதாபிமான உணவுக் கப்பல்கள் கூட அவர்களின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழ்நிலையில் நிச்சயமாக, நாம் மனிதாபிமானத்திற்காக நாம் முன்நிற்க வேண்டும்.

🟩 மதிப்பீட்டை நடத்த வேண்டும்.

இந்த மோதல் நிலைமை நமது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்து தெளிவான மதிப்பீட்டை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

🟩 சரியான திட்டத்துடன் இதன் பொருட்டு செயல்படுவோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களின் நலன்புரி மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த தருணத்திலிருந்தே நாமொரு திட்டத்தின் படி பன்முக தாக்கங்கள் குறித்த அவதனாத்துடன் செயல்படுவோம். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலையை சமரசப்படுத்த எடுக்க முடியுமான சாத்தியமான சகல இராஜதந்திர நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்க வேண்டும். மத்திய கிழக்கில் பணியாற்றும் நமது நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

பாலஸ்தீன மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதே இந்த மோதலின் மூல காரணமும் மிக முக்கிய காரணியும் ஆகும். பாலஸ்தீன அரசும் இஸ்ரேல் அரசும் ஒன்றுக்கொன்று சமாதானமாக வாழ வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here