மது போதையில் வாகனம் செலுத்துவது கண்டறியப்பட்டால் . 500,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது.
இதுபோன்ற சட்ட திருத்தம் அல்லது அமுலாக்க உத்தரவு எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தவறான தகவல்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறான தகவல்களைப் பரப்புவது இலங்கை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.