திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சிக்கினார்!

0
5

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அயகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபர் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் வீடொன்றின் கதவை உடைத்து ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடுதல் மற்றும் நாரஹென்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் கதவை உடைத்து 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடுதல் உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹென்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here