தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந் போதைப்பொருள் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாகத் தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஸ்ரீகாந் அறிமுகமானார்.
இவர் ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு அதிமுக நிர்வாகியான பிரசாத் என்பவர் போதைப்பொருள் விநியோகம் செய்ததற்காக ஸ்ரீகாந் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மற்றொரு நடிகரான ‘கழுகு’ திரைப்படத்தின் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.