பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் அடையாளம் தெரியாத பொதுமகன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றிருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சடலத்தை அவதானித்த தொழிலாளர்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்