வத்தளை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

0
12

இராகமை, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து அந்த பகுதியில் உள்ள வீதிகளில் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3 ஆம் திகதி, இராகமை மற்றும் கந்தானை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here