சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணையவுள்ளதாகவும், அங்கு அவர் முதல் கிரகரி மற்றும் ஆனியா கோஃபி பொருளாதாரப் பேராசிரியராகப் பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.