மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (10) மாலை வீட்டை விட்டு வௌியேறியவர் இரவாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் சென்ற விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்குவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது