மொனராகலை, வெலியாய பகுதியில் இன்று (16) காலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை செலுத்திய 32 வயது சாரதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் தனியார் பேருந்து, சுற்றுலா செல்லும் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற நிலையில், தம்பகல்ல-மொனராகலை பாதையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் அரச பேருந்தும் மோதியுள்ளமை தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.