இலங்கை தம்பதியரை தாக்கிய இஸ்ரேலியர்கள் கைது!

0
31
arrest

அருகம்பேயில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் நேற்று பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த தம்பதியினர் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது, ​​26 வயதுடைய இரண்டு வெளிநாட்டினர் வீதியை தடுத்ததால் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது உடல் ரீதியான தாக்குதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

அருகம்பே சுற்றுலா பகுதிகளில் அதிகளவான இஸ்ரேலிய பிரஜைகள் நடமாடுவதாகவும் சுற்றுலா பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் முன்னதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here