வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
7

இந்த வருடத்தின் கடந்த 08 மாதங்களில் 2,12,302 இலங்கை தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வேலைவாய்ப்புக்காக 1,30,252 ஆண் தொழிலாளர்களும் 82,050 பெண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5.11 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here