அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த இலங்கை ஜனாதிபதி

0
62

அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்து விருந்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நியூயோர்க் , லோட்டே அரண்மனை ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) அன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில் கலந்து கொண்டதாக ஜனாதிபதி திசாநாயக்க அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்க நியூயோர்க்கிற்கு வந்திருந்த அரச தலைவர்களுக்கு சிறப்பு இரவு விருந்தும் வரவேற்பும் அளிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here