தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியுமெனவும் குறித்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளது.
GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியுமென தெரிவித்துள்ளது.