புப்புரஸ்ஸையில் ஆடுகள் திருட்டு!

0
64

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ லெவலன் தோட்டம், ஜனஉதான பகுதியில் நேற்றிரவு இரு ஆடுகள் களவாடப்பட்டுள்ளன.

பட்டிக்குள் புகுந்துள்ள கொள்ளையர்கள், அங்கிருந்த இரு ஆடுகளை களவாடிச்சென்றுள்ளனர்.

அருகில் உள்ள காட்டில் வைத்து ஆடுகளை வெட்டி, இறைச்சியை எடுத்துவிட்டு தோல்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கலஹா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.களவாடப்பட்டுள்ள ஆடொன்றின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாவென அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here