கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

0
105

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வெளியேற்ற அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர, மெததும்பர மற்றும் மினிபே பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

பதுளை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here