புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

0
101

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

உக்ரைன் முழுவதையும் இணைத்து, முன்னாள் சோவியத் பேரரசின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் தொடர புடின் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையுடன் நன்கு அறிந்த ஆறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரொய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த அறிக்கைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைதி பேச்சுவார்த்தையாளர்களின் அறிக்கைகளுக்கு முரணாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புடின் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார் என்று டிரம்பின் குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், புடினின் நோக்கங்கள் அப்படியே இருப்பதாகவும், முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதாகவும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறையின் இந்த தகவல்கள், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உளவுத்துறை நிறுவனங்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தற்போது உக்ரைனின் நிலப்பரப்பில் தோராயமாக 20 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் லுஹான்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் மாகாணங்களின் பெரும் பகுதிகள், சபோரிஜியா, கெர்சனின் சில பகுதிகள் மற்றும் கிரிமியா ஆகியவை அடங்கும்.

இவை அனைத்தையும் ரஷ்யாவின் ஒரு பகுதி ஆகும் என புடின் கூறுகிறார். இந்த ஆண்டு, ரஷ்ய இராணுவம் தோராயமாக 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here