மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெறுகின்றது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு காலை 9 மணிக்கு பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் கொட்டகலை கொமர்சல் வளாகத்தில் நடைபெறும்.
1939 டிசம்பர் இறுதியல் ஆரம்பமாகி 1940 ஜனவரிவரை தொடர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தமது மக்களுக்காக உயிர்கொடை செய்த முல்லோயா கோவிந்தன் உயிர்நீத்த நாளிலேயே ஒட்டுமொத்த மலையக தியாகிகளும் நினைவு கூரப்படுகின்றனர்.
1940 ஜனவரி 10 ஆம் திகதியே மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார் முல்லோயா கோவிந்தன்.
மலையக தியாகிகள் தினம் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் இன்று நடைபெறவுள்ளன.
kuruvi.lk




