இந்தோனேசியாவின் தீவு கூட்டங்களில் ஒன்றான ஜாவா தீவில் பெய்து வரும் கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கு பாண்டுங் மாவட்டத்தில் உள்ள பசிர் லாங்கு கிராமத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரைகளை உடைத்து கொண்டு வெள்ள நீர் ஓடுகிறது.
சேறு, பாறைகள் மற்றும் மரங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு, அதனால், மலைப்பிரதேசத்தில் இருந்த 34 வீடுகள் அடியோடு புதைந்து போயின.




