தங்கம் விலை கடந்த ஆண்டு தொடங்கி நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பு ஆண்டு (2026) இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.2 லட்சத்தை கடந்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த விலை உயர்வால் சாமானியர்களால் தங்கத்தை வாங்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக தங்கம் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.




