கனடாவில் (Canada) உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
மே மாதத்தில் கனடாவின் பணவீக்க விகிதம் 3.2 சதவீதமாக உயர்ந்த வேளையில், மளிகைப் பொருட்களின் விலை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரத் துறை (StatCan) தெரிவித்துள்ளது.
குறிப்பாக, புதிய பழங்களின் விலை 5.3 சதவீதமும், காய்கறிகளின் விலை 9 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மெக்சிகோவில் (Mexico) நிலவிய மோசமான வானிலை மற்றும் வர்த்தக வரி அச்சம் காரணமாக தக்காளி விலை மட்டும் 45 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.
றொரண்டோவைச் (Toronto) சேர்ந்த கிறிஸ்டினா நோட்டாரியோ (Christina Notario), ஒலிவியா கிராஸ் (Olivia Cross), அலிசன் சானி (Alisson Zani) போன்ற நுகர்வோர், வருமான உயர்வு இல்லாத நிலையில் இந்த விலை உயர்வு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் சுமையையும் அளிப்பதாகக் கவலையடைந்துள்ளனர்.
மறுபுறம், மத்திய கிழக்கு பதற்றத்தால் மே மாதத்தில் 33% உயர்ந்திருந்த எரிபொருள் விலை, தற்போது லிட்டருக்கு 1.60 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது ஓட்டுநர்களுக்குச் சற்றே நிம்மதியைத் தந்துள்ளது.
பிஎம்ஓ (BMO) வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டக் போர்ட்டர் (Doug Porter), எரிபொருள் விலை சரிவால் வரும் மாதங்களில் பணவீக்கம் ஓரளவுக்குக் குறையக்கூடும் எனக் கணித்துள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் தேவை காரணமாக கணினி மற்றும் தொழில்நுட்பக் கருவிகளின் விலை 3.9% உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.




