கட்டார் எரிவாயு ஆலையில் விபத்து; 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலிஸ

0
39
dailythanthi

கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

ஈரான் தாக்குதல்

இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது.

அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.

விபத்து

இந்த நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனால் பதற்றம் சற்று தணிந்தது. இதனை தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது.

12 இந்தியர்கள்

இதற்காக, ஊழியர்கள் மற்றும் என்ஜினீயர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு வினியோக ஆலையில் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த கோர விபத்தில் ஆலையில் பணியாற்றி கொண்டிருந்த 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் மாயமான தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here