அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (08) ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, ஆரம்பிக்கப்படும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் டிசம்பர் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளன.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சை டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




