கடைசி டி20 போட்டி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

0
7
dailythanthi

இந்தியாவுக்கு வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியும் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

முதல் இரு ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் இந்தியா ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தானை 160 ரன்னுக்குள் மடக்கிய இந்தியா 15 ஓவருக்குள் அதை ‘சேசிங்’ செய்து அசத்தியது. தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் ரன்மழை பொழிந்தனர். தற்போது தொடரை வசப்படுத்தி விட்டதால் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால் ‘இளம்புயல்’ வைபவ் சூர்யவன்ஷிவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இறங்கி மட்டையை சுழற்றுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்து வீச்சில் வேகப் வீச்சாளர் யாஷ் தாக்குர் இடம் பெறலாம். மற்றபடி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியில் இரு ஆட்டத்திலும் தொடக்கம் சொதப்பியது. அதிரடி பேட்ஸ்மேன் ரமனுல்லா குர்பாஸ் இரண்டு முறையும் டக்-அவுட்டில் வீழ்ந்தார். இதனால் கடைசி ஆட்டத்தில் பரிகாரம் தேட முயற்சிப்பார். இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள முழுமையாக நிறைவடைந்த 10 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ள ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைக்க முயற்சிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here