சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது!!!

0
91

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக இன்று (20) அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்குமாறு, எரிவாயு நிறுவனங்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதுவரை இதுதொடர்பில் சரியான பதில் ஒன்று கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதிருக்கின்ற நிலமைக்கு அமைவாக சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எரிவாயு நிறுவனங்களை மூடி விடுவதற்கு நேரிடும் என்று எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்குள் கட்டாயமாக எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here