கள்ள தொடர்பு காரணமாக இருவர் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை- ஹபராதுவ பகுதியில் சம்பவம்

0
254

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெடிவத்த பகுதியில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ருஹுனு குமாரி கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நேற்று (14) மாலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஹங்கம, குருதுவத்த பகுதியை சேர்ந்த 54 வயதுடைய நிஹால் பொதேஜு என்பவரும், ஹபராதுவ, களுவகஹவத்த பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மிகாஷா தில்ஹானி எனும் பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கள்ள தொடர்பு ஒன்றின் காரணமாகவே குறித்த இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here