மேல் கொத்மலை நீர்தேகக்த்தில் ஆணின் சடலம் மீட்பு!

0
290

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் அணைக்கட்டு பகுதியில் 18.08.2018 அன்று மாலை 4 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்தேக்கத்தில் இருந்த அதிகாரிகள், சடலமொன்று மிதப்பதைக்கண்டு தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here