புரட்டொப்ட் வைத்தியசாலைக்கு இ.தொ.காவினால் சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது!!

0
185

கொத்மலை பிரதேச சபைக்கு உடபட்ட புரட்டொப்ட் மக்களின் நலன் கருதியும் நோயாளர்களின் நலன் கருதியும் மலையக தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின்19ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் புதிய கிராமங்கள்,சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொன்டமான் அவர்களின் தலைமையில் மத்திய மாகாண முன்னால் தமிழ் கல்வி அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களினால் குறித்த வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டதுடன்.அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 19ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகளும் நடைபெற்றது

இந்திகழ்வில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி மற்றும் வைத்திய அதிகாரி திரு திமுத்துருவான் மற்றும் தோட்ட தலைவர் வாலிப காங்கிரஸ் தலைவர் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here