தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இனந்தெரியாத ஆணிண் சடலம் மீட்பு

0
254

தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்றை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலைகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 65ற்கும் 70ற்கும் இடையிலான வயது மதிக்கதக்கவர் எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

DSC05467 DSC05460

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

 

எஸ். சதீஸ், க. கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here