‘பாதாள உலக குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் இது’ – பொது பாதுகாப்பு அமைச்சர்

0
37

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் அவரது சகாக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் நீண்ட காலமாக வளர அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதாள உலக குற்றங்களுக்கு முற்றிலுமாக முடிவுகட்ட வேண்டிய நேரம் இது என்றும், அத்தகைய குழுக்கள் பொதுமக்களை தொடர்ந்து ஒடுக்குவதற்கு இனி வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here