பயணிகள் பேருந்துகளில் அலங்காரங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற அலங்கார பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கும் சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் அறிவித்தார்.
இதற்கு முன்னதாக ஜூன் 2, 2023 அன்று இது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. எனினும், அதை இடைநிறுத்தி ஒரு புதிய சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இது செப்டம்பர் 9, 2025 முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பேருந்து இயக்குபவர்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.