TRF ஐ பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா!

0
4

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆயுததாரி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புபொறுப்பேற்றது.

இந்நிலையில் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வெளியுறவுத்துறை, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ ஒரு வெளிநாட்டு தீவிரவாக அமைப்பாகவும் (FTO), (லஷ்கர் தொய்பாவால்) நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாதியாகவும் (SDGT) அறிவிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here