அரச ஓய்வூதியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ள உதவித்தொகை

0
129

அடுத்த மாதம் முதல் நடைமறைக்கு வரும் வகையில் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா இடைக்கால உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய,தற்போது வழங்கப்படும் 2500 ரூபாவுக்கு மேலதிகமாக 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்படும்.

இலங்கையிலுள்ள ஏழு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் இந்தக் கொடுப்பனவின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள்.

மேலும், கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2024 பட்ஜெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2500ரூபா, ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை 3000ரூபா மற்றும் அதன்படி அனைத்து அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த மாதம் முதல் 5000ரூபாவாக வழங்கப்படும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here