“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். பெப்ரவரி 10 ஆம் திகதிக்காக காத்திருக்கின்றோம். அப்போது சம்பளம் கிடைக்கும் என நம்புகின்றோம்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படுவதில்லை, அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
மலையக மக்கள் இந்த அரசாங்கத்தை நம்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.




