தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிபெறவுள்ளதாக வெளியாகும் தகவலை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து பதவிகளை பெறப்போவதில்லை. எனினும், இந்த அரசாங்கத்தின் பயணத்துக்கு எனது ஆசிர்வதம் உள்ளது. ஏனெனில் ஊழல் வாதிகளுக்கு இடமளிக்கப்படவில்லை.” என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
“ நாட்டை பாதுகாப்பதற்காக திர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்று கூடுகின்றனராம். நாட்டை நாசமாக்கிய தரப்பினரே இவ்வாறு பேரணி நடத்த வருகின்றனர். 70 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி செய்த மேற்படி தரப்பினரால் அக்காலப்பகுதியில் நாட்டுக்காக செய்யமுடியாததை இனி எவ்வாறு செய்வார்கள்?
இன்று அரசியல் கலாசாரம் மாறிவிட்டது. இப்படியானவர்களை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.” – என்றார் பொன்சேகா.




