அரிசிக்கு நாட்டில் தட்டுப்பாடு? – ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய் !!!

0
179

நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாயாக உயரும் நிலை காணப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சேமசிங்க தெரிவித்தார்.

நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் கொள்வனவு செய்வதாகவும் கூறினார்.

இருப்பினும் ஆலை உரிமையாளர்கள் சந்தையில் கொள்முதல் செய்ய நெல் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகவே குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here