ஆசிரியர் போராட்டம் தொடர்பில் பலர் சமூகவலைதளங்களில். கொச்சையான வார்த்தை பிரயோகங்களையும் அவதூறான விடயங்களையும் பரப்புகின்றனர்.அவ்வாறு அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஆசிரியர் ஜனநாயக சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணமுத்து பாலசேகரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் பத்துவருடத்துக்கு மேலாக எமது உரிமைக்காக போராடி வருகின்றோம்.ஆசிரியர்கள் என்போர் அரசாங்க உத்தியோகத்தர்கள் எனவே எமது பிரச்சனைகளையோ அல்லது உரிமைகளையோ அரசாங்கத்திடமே கேட்டு பெறவேண்டும்.அதனாலேயே அரசாங்கத்திடம் கேட்டு போராடி வருகின்றோம்.எனவே எமது அறவழி போராட்டத்தை எவராவது சமூக ஊடகங்களில் கொச்சைப்படுத்தி மக்களை திசைத்திருப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் சரவணமுத்து பாலசேகரம் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்