ஆபிரிக்காவில் படகு கவிழ்ந்ததால் 63 பேர் உயிரிழப்பு!

0
176

ஆபிரிக்காவில் 63 பேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி படகில் புறப்பட்ட போது கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்ததால் இதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 56 பேரின் உடல்களை மீட்டதுடன் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.

இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here