ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதலுக்கு எல்லையில் தலிபான் படை பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் உயிரிழப்பு

0
47

ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினருக்கு இடையே எல்​லை​யில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற மோதலில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​த​தாக தலி​பான் அரசின் செய்தித் தொடர்​பாளர் நேற்று அறி​வித்​தார்.

ஆப்​கன் தலைநகர் காபூல் மற்​றும் கிழக்கு பகு​தி​யில் உள்ள சந்தை ஆகிய​வற்​றில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது. ஆனால் இந்த தாக்​குதலுக்கு பாகிஸ்​தான் பொறுப்​பேற்​க​வில்​லை.

பாகிஸ்​தானில் செயல்​படும் தெக்​ரிக் இ-தலி​பான்​களுக்கு (டிடிபி) ஆப்​கானிஸ்​தானில் அடைக்​கலம் கொடுப்​ப​தை​யும், ஆயுதப் பயிற்சி அளிப்​ப​தை​யும் தலி​பான் அரசு நிறுத்தி கொள்ள வேண்​டும் என்று மட்​டும் பாகிஸ்​தான் அறிக்கை வெளி​யிட்​டது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தெக்​ரிக் இ-தலி​பான்​கள் நடத்​திய தாக்​குதலில் பாகிஸ்​தான் வீரர்​கள் நூற்​றுக்​கணக்​கானோர் உயி​ரிழந்​தனர் என பாகிஸ்​தான் குற்றம் சாட்​டியது.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் தாக்​குதலுக்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக, பாகிஸ்​தான் எல்லை மீது ஆப்​கன் படை​யினர் நேற்று முன்​தினம் இரவு தாக்​குதல் நடத்​தினர்.

பஹ்ரம்சா மாவட்​டத்​தின் துரந்த் எல்​லை​யில் இந்த தாக்​குதல் நடை​பெற்​ற​தாக​வும், அப்​போது பாகிஸ்​தான் ராணுவத்​தின் 3 நிலைகளை ஆப்​கன் படை​யினர் கைப்​பற்​றிய​தாக​வும் ஆப்​கானிஸ்​தானின் ஹெல்​மாண்ட் பகுதி செய்தித் தொடர்​பாளர் மவுலி முகமது காசிம் ரியாஸ் தெரி​வித்​தார்.

இதுகுறித்து ஆப்​கானிஸ்​தானின் தலி​பான் அரசு செய்தி தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் கூறுகை​யில், ‘‘ஆப்​கன் மற்​றும் பாகிஸ்​தான் படை​யினர் இடையே நடை​பெற்ற சண்​டை​யில் பாக். வீரர்​கள் 58 பேர் உயி​ரிழந்​தனர். ஆப்​கன் தரப்​பில் 9 வீரர்​கள் உயி​ரிழந்​தனர், 16 பேர் காயம் அடைந்​தனர்’’ என்​றார்.

எச்சரிக்கை: ஆப்கன் அமைச்சர் அமிர் கான் முட்டாகி டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையில் சுமார் 4 மணி நேரம் ஆப்கன் படைகள் நடத்திய பதிலடி தாக்குதல் மூலம் எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிலர் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பாகிஸ்தான் மக்களும், பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ஆப்கானிஸ்தானுடன் அமைதியான உறவை விரும்புகின்றனர். அதை அங்குள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

கத்தாரும், சவுதி அரேபியாவும் கேட்டுக் கொண்டதால், நாங்கள் தாக்குதலை நிறுத்தினோம். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால், எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here