இங்கிலாந்து பிரதமர் எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
கடந்த ஜூலை 23, 24 ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றிருந்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் 56 பில்லியன் டாலராக உள்ள இருதரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்தியா வருமாறு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட கீர் ஸ்டார்மர், 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 8-ம் திகதி இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
‘இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 9-ம் திகதி பிரதமர் மோடியை மும்பையில் சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, விஷன் 2035 என்ற 10 ஆண்டு திட்டத்தின் மூலம் இந்தியா-இங்கிலாந்து இடையே ஏற்பட்ட கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள்.” – என்று குறிப்பிட்டுள்ளது.