இன்று முதல் மைதானத்திற்குள் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதி.

0
200

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி நடைபெற்று வரும் முதலாவது டெஸ்டின் 4 ஆவது நாளான இன்று முதல் மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எனினும் தற்போதைய தடுப்பூசி நெறிமுறைகளின்படி, கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அதனால் பார்வையாளர்கள் தடுப்பூசி அட்டை அல்லது தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் என்பவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

போட்டியைப் பார்க்க விரும்பும் அனைத்து பார்வையாளர்களும் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இரண்டாவது தடுப்பூசியை முடிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here