இலங்கை-பங்களாதேஷ் 20-20 போட்டி இன்று;டிக்கட்டுக்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன

0
6

இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

பல்லேகலயில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இலங்கை-பங்களாதேஷ் 20-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

தொடரில் இலங்கை அணி 1 புள்ளியுடன் முன்னிலை வகிக்கிறது.

இன்று இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால், இலங்கை அணி 20-20 தொடரையும் வெல்லும்.

இலங்கை அணி இதுவரை தம்புள்ளை மைதானத்தில் எட்டு 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளது, இவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

தம்புள்ளை மைதானத்தில் நடைபெறும் சர்வதேச 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி இணைவது இதுவே முதல் முறை ஆகும்.

ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 20-20 போட்டிகளில், 5 போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியும், 3 போட்டிகளில் இரண்டாவது துடுப்பெடுத்தாடிய அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், அதன்படி பல்லேகலவைப் போலவே தம்புள்ளை மைதானமும் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்று இலங்கை கிரிக்கெட் சபை நேற்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here