காஸாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா நகரில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா பகுதியில் எஞ்சியிருக்கும் இரண்டு இருதயநோய் நிபுணர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது. குறித்த வைத்தியரின் ஊழியர்கள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.