ஈரான் இன்று மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 8000 இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய அதிகாரிகள் மின்நிலையங்கள் தாக்கப்படும் சாத்தியக்கூறுகளை எதிர்கொள்வதற்காக முன்கூட்டியே தயாராகயிருந்தனர்,பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு மூன்று மணிநேரத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தென்பகுதியில் ஒரு மூலோபாய உட்கட்டமைப்பு வசதிக்குஅருகில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலின் மின்சார கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனால் பல சமூகங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் மின்சாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் மின்சார சபையின் பல குழுக்கள் களத்தில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.