13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
விசாகப்பட்டினத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,000 ரன்களைக் கடந்துள்ளார் .
maalaimalar