எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடமாட்டக்கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் நாளை (25), 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.