எத்தனை வங்கிகள் உருவாக்கப்பட்டாலும் பயனில்லை மக்களுக்கு சேவைகள் சென்றடையாவிட்டால்_ எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு.

0
156

நுவரெலியா மாட்டத்தில் மஸ்கெலியா பகுதியில் சமூர்த்தி வங்கி ஒன்று திறக்கப்பட வேண்டும் என நானும் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களும் கேட்டுக்கொண்டதற்கமைய இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளது.ஆனால் எத்தனை வங்கிகள் திறந்து வைத்தாலும் பயனில்லை மக்களிடம் சேவைகள் சென்றடையாவிட்டால் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
மஸ்கெலியா பகுதியில் சமூர்த்தி வங்கி திறக்கும் நிகழ்வு இன்று (04) திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமயில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இங்கு உரையாற்றி பணிப்பாளர் தெரிவத்தார் சமூர்த்தி வங்கியில் நிறைய காசு இருக்கின்றது அந்த காசு மக்களை சென்றடைய வேண்டும். என்று அந்த நோக்கம் தான் எமது நோக்கம்.வங்கி திறப்பது மக்களுக்கு சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான். உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் சமூர்த்தி அரசியல் கட்சி பார்த்து தான் பெற்றுக்கொடுக்கப்பட்டது அதனால் கிடைக்க வேண்டிய எத்தனையோ பேருக்கு சமூர்த்தி கிடைக்க வில்லை.

நாங்கள் சமூர்த்தி பெற வேண்டியவர்களின் பட்டடில் தயாரிக்கும் போது 23000 பேருக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. என்பதனை கொரோனா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க பட்டியல் தயாரிக்கும் போது தெரிந்துக்கொண்டோம் அதன் அடிப்படையில் தான் 5000 பெற்றுக்கொடுத்தோம் நாங்கள் எழை மக்களுக்கு உதவிகள் செய்யும் போது கட்சி பார்ப்பதில்லை.அமைச்சர் பெசில் ராஜபக்ஸ அவர்களும் மக்களுக்கு இந்த நிதி உதவி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று தான் எதிர்ப்பார்கிறார்.

ஆகவே எந்நாளும் சமூர்த்தி உதவி பெறும் மக்களாக இருக்கக்கூடாது இந்த நிதியினை கொண்டு இவர்கள் வாழ்க்கையில் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று எதிர்பார்த்து தான் கடந்த வருடமும் இந்த வருடமும் பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,

அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான நிதியினை சமூரத்;திக்காக ஒதுக்கப்படுகிறது இது ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அந்த நிதியின் மூலம் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் ஆகவே இந்த நோக்கம் நிறைவேற வேண்டும்.மக்களுக்கு சேவையாற்றும் போது மக்கள் குறை கூறுவார்கள் அதனை பொறுப்படுத்தாது சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவையாற்ற வேண்டும் இந்த பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரம் சேவையாற்றாது பக்கத்தில் உள்ளவர்களையும், இணைத்துக்கொள்ள வேண்டும்;

கடந்த காலங்களில் சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் வீடு வீடாக சென்று சேவையினை முன்னெடுத்தார்கள் அதற்காக நான் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜ்,மஸ்கெலியா பிரதேச சபை தலைவி செம்பகவள்ளி, மாவட்டச் செயலாளர்,சமூர்த்தி உத்தியோகஸத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here