எல்பொடவில் வீடொன்று முற்றாக தீக்கரையாகியது.

0
174

புரட்டொப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பொட ஜனஉதான கம பகுதியில் வீடொன்று முற்றாக தீக்கரையான சம்பவமொன்று 13/09/2022 செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நல்லத்தம்பி என்பவரின் வீடே இவ்வாறு தீக்கரையாகியுள்ளது.குறித்த வீட்டில் தீப்பிடித்த போது மனைவி பார்வதி,மகள்,மருமகள்,பேரப்பிள்ளை ஆகியோரே வீட்டிலிருந்ததோடு தீப்பிடித்த மறுகணமே வீட்டிலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளனர்.மேலும் ஊர்மக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் வீடு முற்றாக தீக்கரையாகியுள்ளதோடு அனைத்து உடைமைகளும் எரிந்துள்ளது.

வீடு தீக்கரையாகியது தொடர்பில் விசாரணைகளை புரட்டொப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here