ஒரே சமயத்தில் கொரோனா, பன்றி காய்ச்சல் பாதிப்பு! – நேபாளத்தில் அதிர்ச்சி!

0
194

நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில் கொரோனா, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளான டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்1என்1 போன்றவை மக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன.

நேபாளத்தில் கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளடு. ஒரே சமயத்தில் கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்றி காய்ச்சலால் சமீபத்தில் நேபாளத்தில் அரசியல் தலைவர்கள் கூட உயிரிழந்தார்கள். தற்போது இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளும் ஏற்படுவது நாட்டில் அதிகமான பலி எண்ணிக்கையை உண்டாக்கக் கூடும் என பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here