கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்கள் குழுவினால் குறித்த திகதியில் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் ஜூன் 22ஆம் திகதி வரை 13 விமானப் பயணங்களை இரத்து செய்துள்ளது.இதனால், ஜகார்த்தா, டெல்லி, ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர், குவைத், அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் செல்ல விமான பற்றுச் சீட்டுக்குக்களை வாங்கியிருந்த விமானப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதன் மூலம் கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்கள் குழுவினால் குறித்த திகதியில் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
திடீரென விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையால் விமானப் பயணிகள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, “கொரியாவுக்குச் செல்லும் விமானத்தை ஓட்டிய விமானி ஓஷத விமலரத்ன, பிற்பகல் 1.40க்கு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அத்தகைய அறிக்கையை அனுப்பிய பிறகு, சர்வதேச விதிகளின்படி, தலைமை விமானி மட்டுமே இந்த விமானத்தை இயக்க முடியாது. மேலும் 22 விமானிகள் முதல் அதிகாரிகளாக செயல்பட்டனர். அன்று அவர்களுக்கு ஓய்வு நாள். எவ்வாறாயினும் அந்த விமானிகளை விமானத்தை செலுத்தக் கோரிய போதிலும் . யாரும் வரவில்லை. இதுதான் கசப்பான உண்மை” என தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 22ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்ட 13 விமானங்கள் பின்வருமாறு.
UL – 364 ஜூன் 17 முதல் 22 வரை ஜகார்த்தா செல்லும் மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 21 அன்று பம்பாய்க்கு UL – 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் திகதி டெல்லிக்கு செல்லும் யுஎல்-195 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 21ஆம் திகதியன்று ஹைதராபாத் செல்லும் UL – 175 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சென்னைக்கு UL – 125 இன் இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 17ஆம் திகதியன்று தம்மாம் செல்லும் UL – 263 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
UL – விமானம் 308 சிங்கப்பூர் செல்லும் விமானம்
ஜூன் 16ஆம் திகதி குவைத்துக்கு செல்லும் UL -229 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 18ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதிகளில் அபுதாபிக்கு செல்லும் UL – 207 என்ற இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.