கனடா இன்னும் 50 ஆண்டுகள் நீடிக்குமா? கால்வாசி மக்கள் சந்தேகம்!

0
3
www.winnipegsun.com

இன்னும் அரை நூற்றாண்டிற்குப் பிறகு கனடா (Canada) தற்போதைய எல்லைகளுடனும் மாகாணங்களுடனும் இதே நிலையில் நீடிக்குமா என்பதில் பல கனடியர்கள் தங்களுக்குள் அஞ்சுகின்றனர்.

இந்த விடயத்தை புதிய தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அல்பெர்ட்டா மாகாணப் பிரிவினைவாதம் (Alberta separatism) மற்றும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதார அழுத்தங்கள் (American pressure) போன்ற காரணிகளால் நாட்டின் நீண்டகால ஒற்றுமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

Postmedia-Leger இணைந்து ஜூன் 19 முதல் 22 வரை 1,528 கனடிய பெரியவர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 15 சதவீதமானோர் கனடா தனது தற்போதைய எல்லைகளுடன் 50 வருடங்களின் பின் நிலைத்திருக்காது என நம்புகின்றனர்.

மேலும் 11 சதவீதமானோர் தங்களால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒட்டுமொத்தமாக நான்கில் ஒரு கனடியர் (One in four Canadians) நாட்டின் நீண்டகால எதிர்காலம் மற்றும் ஒற்றுமை குறித்து சந்தேகம் அல்லது நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here